News September 20, 2024

பெண் கொலை வழக்கில் சிக்கியவருக்கு புழல் சிறை

image

பாலியல் தொழில் செய்து வந்த தீபா என்ற இளம்பெண்ணைக் கொன்று, உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய இளைஞர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது, கடந்த 17ஆம் தேதி தீபாவை தனது வீட்டுக்கு அழைத்ததாகவும், அதற்கு அவர் ரூ.12,000 தருமாறு கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து அவரை சுத்தியால் அடித்து கொலை செய்ததாக அவர் தெரிவித்தார்.

Similar News

News September 15, 2025

சென்னையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

image

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம் வருகிற 21ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாக பணிகள் தொடர்பான முடிவுகள்,நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா குறித்தும்,சினிமாவில் பொன்விழா கண்ட ரஜினிகாந்த் மற்றும் எம்பியாக பதவியேற்றுள்ள கமலஹாசனுக்கும் பாராட்டு விழா நடத்துவது தொடர்பாகவும் பேச உள்ளனர்.

News September 15, 2025

கே.கே.நகரில் விழுந்த ராட்சத மரம்

image

சென்னை, கே.கே.நகர் 80 அடி சாலையில் பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு முன்பாக மழை நீர் வடிகால் பணியின் போது பள்ளம் தோண்டி மூடப்பட்டுள்ளது. அப்போது, பள்ளம் தோண்டும் போது மரத்தின் வேர்களை வெட்டியதால் பிடிமானம் இல்லாமல் சற்றுமுன் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News September 15, 2025

தயார் நிலையில் மாநகராட்சி

image

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைக்காக மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் ரிப்பன் கட்டட வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு, தயார்நிலையில் வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

error: Content is protected !!