News April 10, 2025

பெண் எஸ்.எஸ்.ஐ-க்கு வாக்கி-டாக்கியில் பறந்த உத்தரவு

image

அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணியாற்றிய சுமதி, கற்பழிப்பு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசி, புகாரை ஏற்க மறுத்துள்ளார். இந்த விவகாரம் டி.ஐ.ஜி. வருண்குமார் கவனத்திற்கு சென்றதால், அவர் வாக்கி-டாக்கி மூலம் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி, வாக்கி-டாக்கியிலேயே எஸ்.எஸ்.ஐ சுமதி-யை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

Similar News

News November 9, 2025

அரியலூர்: ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்பி

image

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்களுக்குக்கான எழுத்துத் தேர்வு இன்று (நவ.09) நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று (நவ.08) தேர்வு நடைபெறும் மையங்களை ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு பணிகளுக்கு செல்லும் காவல்துறையினருக்கு அறிவுரையும் வழங்கினார்.

News November 9, 2025

அரியலூர்: குரூப்-2 தேர்விற்கு இலவச பயிற்சி

image

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நவ.10-ம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News November 9, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!