News August 2, 2024

பெண் எஸ்எஸ்ஐ மாரடைப்பால் மரணம்!

image

சென்னை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜெயசித்ரா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அயனாபுரத்தில் உள்ள வீட்டில் தனது அக்காவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயக்கமடைந்தார் . மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறை அதிகாரி ஜெயசித்ராவின் சொந்த ஊர் புதுக்கோட்டை ஆகும்

Similar News

News December 21, 2025

புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று (டிச.21) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்காளர் பட்டியலில் புதியதாக வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 18 வயது நிரம்பியவர் தங்களது பெயரை வாக்காளர், தேசிய வாக்காளர் சேவை போர்டல் (https://voters.eci.gov .in) மூலம் பெயர் சேர்க்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News December 21, 2025

புதுகை: கிரைண்டர் வாங்க பணம் வேணுமா?

image

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் புதுகை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். SHARE

News December 21, 2025

புதுகை: மருத்துவர் வீட்டில் 21 பவுன் நகை திருட்டு

image

புதுகை மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (பல் மருத்துவர்). இவரது மனைவி வெள்ளிக்கிழமை இரவு வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சை நிலையத்தில் மருத்துவர் இருந்த நேரத்தில் மேல்தளத்தில் உள்ள மருத்துவரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் உள்ளே பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுகை நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!