News August 2, 2024

பெண் எஸ்எஸ்ஐ மாரடைப்பால் மரணம்!

image

சென்னை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜெயசித்ரா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அயனாபுரத்தில் உள்ள வீட்டில் தனது அக்காவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயக்கமடைந்தார் . மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறை அதிகாரி ஜெயசித்ராவின் சொந்த ஊர் புதுக்கோட்டை ஆகும்

Similar News

News August 9, 2025

புதுகை விநாயகர் சிலை, ஆட்சியர் அறிவுறுத்தல்

image

புதுகை மாவட்டத்தில் விநாயகர் சிலை செய்வோர் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைக் கொண்டு சிலைகளை செய்ய வேண்டும், சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிமணிகள் பூஜை பொருட்கள் பூக்கள், எல்இடி விளக்கு உள்ளவற்றை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், தெர்மாகோல், ரசாயனம் கொண்ட சாயங்கள், எண்ணை வண்ணப் பூச்சுகளை, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகளை பயன்படுத்தக் கூடாது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

புதுகை:இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம்.பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்காக எண்களை பயன்படுத்தி கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News August 8, 2025

அரசு மீன் பண்ணையில் மீன் குஞ்சுகள் விற்பனை கலெக்டர் அருணா தகவல்

image

புதுகை மாவட்டத்தில் தட்டாமலைபட்டி, கருவிடைசேரி, குருங்களூர், அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில், தற்பொழுது பருவமழை காரணமாக இந்திய பெருங்கெண்டை, கட்லா, ரோகு, மிர்கால், மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மீன் வளர்ப்பு கண்மாய், குளங்களில் அரசு விலையில் மீன் குஞ்சுகள் வளர்க்க மீன்வள சார் ஆய்வாளர்களை 8248970355, 9751616866 தொடர்பு கொள்ள கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!