News February 25, 2026
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த 30-வயது இளம்பெண் தனது தாயாருடன் தனியே வசித்து அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இளம்பெண் வீட்டில் தனியே இருப்பதை அறிந்த அதே துணிக்கடை ஊழியர் மகேஷ் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் மகேசை நேற்று கைது செய்தனர்.
Similar News
News February 28, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.27) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 27, 2026
JUST IN: கோவையை உலுக்கிய சம்பவம்.. முக்கிய UPDATE!

கோவை விமான நிலையத்தின் பின்புறம் கடந்தாண்டு நவம்பர் மாதம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், வரும் மார்ச் 7-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது, மாவட்ட மகளிர் நீதிமன்றம். இவ்வழக்கில் சதீஷ், கார்த்தி, தவசி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், அவருடன் இருந்த நண்பர் மற்றும் 112 சாட்சிகளில் 78 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News February 27, 2026
கோவை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க


