News January 15, 2026
பெண்ணின் திருமண வாழ்க்கையை முறித்த பொய்

பொய்யான தகவல்களை சொல்லி நடந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்க முடியும் என்று ஜார்க்கண்ட் HC தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில், திருமணத்தில் உண்மைகளை மறைப்பது வாழ்க்கை துணையை மனரீதியாக கொடுமைப்படுத்துவதற்குச் சமம் என்றும் கோர்ட் கூறியுள்ளது. இந்த வழக்கில், உண்மையை மறைத்து பெண் திருமணம் செய்தது உறுதியானதால், கணவர் கோரிய விவாகரத்தை வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. இதுபற்றி உங்க கருத்து?
Similar News
News January 29, 2026
‘அரசுக்கல்லூரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை’

அண்ணா பல்கலை., கொடூரம் போல, சென்னை நந்தனம் அரசுக் கலைக்கல்லூரியில் மற்றொரு மிருகத்தனமான சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி கேண்டீனில் பணிபுரியும் பெண்ணுக்கு, சமையல் மாஸ்டரான குணசேகர் மற்றும் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே காவலாளியிடம் அப்பெண் கூறியிருக்கிறார். இதுகுறித்த புகாரின் பேரில், குணசேகரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
News January 29, 2026
காங்., அடுக்கிய டிமாண்ட்.. இவ்வளவும் வேண்டுமா?

கனிமொழி – ராகுல் சந்திப்பில் காங்., பல டிமாண்ட்களை அடுக்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, 39 தொகுதிகள், து.சபாநாயகர் பதவி, 2 ராஜ்யசபா சீட், 5 வாரிய தலைவர்கள் பதவி, உள்ளாட்சி தேர்தலில் 20 சீட் வேண்டும் என காங்., கோரிக்கை வைத்துள்ளதாம். அத்துடன், ஒருவேளை தேர்தலுக்கு பிறகு திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் ‘ஆட்சியில் பங்கு’ தரவேண்டும் எனவும் காங்கிரஸ் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
News January 29, 2026
பிப்.3-ல் கூட்டணி பற்றி அறிவிப்பு: பிரேமலதா

இதுவரை கூட்டணி முடிவை அறிவிக்காத தேமுதிக, NDA கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சென்னையில் பிப்.3-ம் தேதி கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்று பிரேமலதா உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதேநேரம், தமிழகத்தில் உள்ள கட்சிகளுடனும், மத்திய அரசுடனும் தேமுதிக நல்ல நட்புறவுடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கலாம்?


