News November 3, 2025

பெண்கள் வெளியே தலைகாட்டவே அச்சம்: நயினார்

image

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் செய்யப்பட்ட விவகாரம் விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து நயினார், வீட்டில் இருந்தாலும் வெளியில் போனாலும் பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே பொழுது விடிகிறது; DMK ஆட்சியில் பெண்கள் வெளியே தலைகாட்டவே அஞ்சுகின்றனர். ஆனால், CM கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

Similar News

News November 3, 2025

BREAKING: நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளுக்கும்…

image

₹50,000 வரை பரிசுகளை வெல்லும் வினாடி வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நவ.5(புதன்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூழல் அறிவோம்’ என்ற தலைப்பில் 6 – 9 வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த வினாடி வினா போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. https://www.tackon.org/soozhal இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 2 மாணவர்களை உள்ளடக்கிய 5 குழுக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 3, 2025

கேன்சர் சிகிச்சை எடுப்பவர்கள் கருத்தரிப்பதில் பிரச்னையா?

image

மார்பகப் புற்றுநோய்க்காக வழங்கப்படும் கீமோதெரபி, கருமுட்டைகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடும். இது சிலருக்கு தற்காலிகமாகவும், சிலருக்கு நிரந்தரமாகவும் கருவுறுதலை பாதிக்கலாம். எனவே, சிகிச்சையை தொடங்கும் முன் கருவுறுதல் பற்றி டாக்டரிடம் பேசுங்கள். கருமுட்டை அல்லது கருப்பை திசுவை உறைய வைக்கலாம். கர்ப்பம் தரிப்பதற்கு இப்படி பல வழிகள் இருப்பதால் கவலைவேண்டாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.

News November 3, 2025

பாஜக தாக்க தயாராகிவிட்டது: கே.என்.நேரு

image

திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து பாஜக தாக்க தயாராகிவிட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். பாஜக தாக்குதலின் முதல் பலி நானாகிவிட்டேன் எனவும், இருப்பினும் எந்த தாக்குதலையும் எதிர்கொண்டு நிற்போம் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, நகராட்சி நிர்வாகத்துறையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலை வழங்கியதாக <<18146062>>கே.என்.நேரு<<>> மீது அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி இருந்தது.

error: Content is protected !!