News April 19, 2025

பெண்கள் பாதுகாப்பிற்கு 24 மணி நேர சேவை

image

பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை, தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பெண்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும், பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர சேவை எண் 181 என்பதை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE செய்ங்க

Similar News

News February 25, 2026

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

image

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது, பொறியியல் பணிகள் காரணமாக, இன்று(பிப்.25) மற்றும் பிப்.27 ஆகிய தேதிகளில், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 25, 2026

திருச்சி மக்களே உஷார்… காவல்துறை எச்சரிக்கை!

image

சொத்து மோசடிகள் குறித்து திருச்சி காவல்துறை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. அதில் ஒரு நிலமோ அல்லது சொத்தோ வாங்கும் முன்
சொத்தின் முந்தைய உரிமையாளர் குறித்த ஆவணங்களை முழுமையாக சரிபார்க்கவும். வில்லங்கங்களை சொத்தின் மீதான கடன்கள், உரிமைகள், சட்ட மோதல்கள் போன்றவற்றை சரிபார்க்கவும். நில பயன்பாடு குடியிருப்பு நிலமா, வணிக பயன்பாட்டின் நிலமா, விவசாய நிலமா என்பதை சரிபார்க்க தெரிவித்துள்ளது.

News February 25, 2026

திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

குற்ற செயல்களை தடுக்கும் வகையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்றச் செயல்களை தடுக்கலாம். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேக நபர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக வாட்ஸ்அப் உதவி எண் 8939146100 அழைக்கலாம்.

error: Content is protected !!