News April 12, 2024

பெண்கள் பள்ளி அருகே மதுபான கூடம் திறக்க எதிர்ப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்தி சவுக் நேரு வீதியில்
அரசு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் பள்ளியில் 1500-க்கு மேற்பட்ட மாணவிகள் படித்துவருகின்றனர். இந்நிலையில் பள்ளி அருகில் தேவாலயம், கல்லறை தோட்டம், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்தப் பகுதியில் தனியார் மதுபான கூடம் அமைக்க முயற்சிகள் நடந்த வருகின்றன. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

Similar News

News November 3, 2025

திருப்பூர்: 10வது படித்தால் அரசு வேலை ரெடி!

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 09.11.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News November 3, 2025

திருப்பூர்: லஞ்சம் கேட்டாங்களா? இதை பண்ணுங்க!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dsptprdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0421-2482816 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News November 3, 2025

திருப்பூர் அருகே சிக்கிய பாலிபர்.. கைது!

image

திருப்பூர்: அவினாசி அருகே முத்து செட்டிபாளையத்தில், அவினாசி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புருஷவா பகார்த்தி (வயது 28) என்பதும், அவரிடம் விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா இருந்ததும் தெரிய வந்தது. மேலும், போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!