News March 30, 2025

பெண்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் வினோத கிராமம்

image

மதுரையை டி.கல்லுப்பட்டி அருகே கூவலப்புரம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பெண்கள் மாதவிலக்கு காலங்களில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் அவலம் இன்றளவும் தொடர்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு அறையில் பெண்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். பெண்கள் பல்வேறு தடைகளை தாண்டி தடம் பதிக்கும் நவீன உலகில் தொடரும் இந்த நடைமுறை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

Similar News

News April 1, 2025

திருப்பரங்குன்றத்திற்கு பக்தர்கள் செல்ல தடை

image

திருப்பரங்குன்றத்தில் ஏப்ரல் 14ல் திருக்குட நன்னீராட்டு விழா நடக்க உள்ள நிலையில், ஏப்ரல்
7 ஆம் தேதி முதல் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், கோவிலில் ஏப்ரல் 7 ஆம் தேதி பாலாலய யாகசாலை பூஜை தொடங்கி குடமுழுக்கு பணியும் , கோயிலின் மூலஸ்தானம் அர்த்தமண்டபம் மகா மண்டபத்தில் மராமத்து பணி நடக்க உள்ளது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News April 1, 2025

மதுரையில் வேலை வாய்ப்பு

image

மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் PGT, TGT, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட 06 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு
B.Ed, BA, M.Com, M.Sc, MA, MBA படித்த 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் <>இந்த<<>> தளத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.21250 -27,500 வரை ஊதியம் கிடைக்கும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News April 1, 2025

மதுரையில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் , சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!