News November 6, 2025

பெண்களுக்கு ₹1,200 தரும் அரசு திட்டம்!

image

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் மூலம் கணவனை இழந்து வாடும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்களின் வயது 60-க்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ₹1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது. கிராம பஞ்சாயத்து (அ) மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பியுங்கள். பல பெண்களுக்கு பயனுள்ள இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News November 6, 2025

டாப் 10 அசுத்தமான நகரங்கள்.. தமிழ்நாடு நம்பர் 1

image

இந்தியாவில் நகர்ப்புற தூய்மை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு, ஸ்வச் பாரத் மிஷன் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கழிவுகளை நிர்வகிப்பதில், சிறிய நகரங்களை விட பெருநகரங்கள் மோசமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரம் நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE IT.

News November 6, 2025

ராகுலுக்கு, பிரஷாந்த் கிஷோர் ஆதரவு

image

பிஹார் தேர்தலில், காங்கிரஸும், ஜன் சுராஜ் கட்சியும் எதிரெதிராக களம் காண்கின்றன. இந்நிலையில், ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுக்கு, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்துள்ளார். ECI-க்கு எதிராக ராகுல் எழுப்பும் கேள்விகள் நியாயமானவை என்ற அவர், வாக்குத் திருட்டு பிஹார் தேர்தல் முடிவை மாற்றலாம் என்ற ராகுலின் அச்சத்தை ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

News November 6, 2025

பணம் பறிப்பதுதான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம்: ஸ்ருதி

image

பணம் பறிப்பதும், எங்களை பிரிப்பதும் தான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம் என மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி பிரியா தெரிவித்துள்ளார். தனக்கு ஒரு வீடு, மாதம் ₹8 லட்சம் வேண்டும் என ஜாய் கிரிசில்டா கேட்பதாகவும், ஊடகங்களை தனிப்பட்ட பொருளாதார லாபத்திற்காக பயன்படுத்துவதாகவும் ஸ்ருதி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கணவருடன் உறுதியாக நிற்கிறேன், அவரை இறுதி வரை காப்பாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!