News January 12, 2025
பெண்களுக்கு எதிரான வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்

ராணிபபேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற தடுப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், சட்டஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்கில் விரைந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா அறிவுறுத்தினார்.
Similar News
News November 13, 2025
ராணிப்பேட்டை: பயணம் செய்ய ரூ.60,000 மானியம்

ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில், தமிழக அரசின் நலத்திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்காக ரூ.60,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இன்று (நவ.12) நிலவரப்படி, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயணத்திற்காக 01.11.2025க்குப் பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2026. மேலும் விவரங்களுக்கு www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்
News November 13, 2025
ராணிப்பேட்டை: ஆசிட் குடித்த இளம்பெண்!

ராணிப்பேட்டை: மகேந்திரவாடி கிராமம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று (நவ.12) வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதில் மனம் உடைந்த அவரது மனைவி சோனியா (25) ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
News November 13, 2025
ராணிப்பேட்டை காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் இரவு பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


