News August 31, 2024
பெண்களுக்கு எதிரான வன்முறை கவலை அளிக்கிறது

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள்தான் சமூகத்தில் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. பெண்களின் பாதுகாப்புக்காக பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை தீவிரமாக செயல்படுத்துவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
Similar News
News July 8, 2025
இந்த பழக்கங்கள் இருக்கா? உடனே மாத்திக்கோங்க..

யாருக்கு தான் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. ஆனால், இளம் வயதிலேயே சிலர் பயங்கர உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. படத்தில் இருக்கும் பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? உடனே இந்த பழக்கங்களை கைவிட்டுவிட்டு ஒரு ஹெல்தியான லைஃப் ஸ்டைலுக்கு மாறுங்கள். அதுவே உங்களை இளமையாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். SHARE IT.
News July 8, 2025
Most Valuable IPL டீமில் CSK பின்னடைவு

Houlihan Lokey நடத்திய மதிப்பீட்டு ஆய்வின்படி, Most Valuable IPL அணியாக 2,305 கோடி உடன் RCB முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனையடுத்து, 2,073 கோடி உடன் MI 2-ம் இடத்தில் உள்ளது. IPL 2025-ல் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட CSK 2013 கோடி உடன் 3-ம் இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து, KKR – 1,945 கோடி, SRH – 1,319, DC – 1,302, RR – 1,251, GT – 1,216, PBKS – 1,208 & LSG – 1,045 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
News July 8, 2025
மினிமம் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்ய திட்டம்

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச மினிமம் பேலன்ஸை பராமரிக்காவிட்டால், அபராதத் தொகை வசூலிக்கும் நடைமுறையை கைவிட, வங்கிகள் பரிசீலித்து வருகின்றன. ஏற்கனவே, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி இதை அமல்படுத்தி விட்டன. குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு பதிலாக டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணம் போன்றவற்றின் வாயிலாக வருவாய் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.