News April 22, 2024
பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு அமைப்பு சார்பில் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வரும் 28.04.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News July 6, 2025
திருவாரூர்: ரூ.85,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட (1007) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் <
News July 6, 2025
கொரடாச்சேரி: டூவீலரில் இருந்து மயங்கி விழுந்தவர் பலி

கொரடாச்சேரி அருகே கீரந்தங்குடியைச் சேர்ந்தவர் காத்தையன் (61). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் திருவரங்கநல்லூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் காத்தையனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு டூவீலரில் இருந்து மயங்கி கீழே விழுந்ததில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News July 6, 2025
மன்னார்குடி தெப்பத்திருவிழா; கட்டுமான பணிகள் தீவிரம்

ஆசியாவிலேயே மிகவும் பெரிய தெப்பக்குளம் என்று போற்றப்படும் மன்னார்குடி ஹரித்ராநதி குளத்தில் வருகின்ற ஜூலை 10ம் தேதி இராஜகோபால சுவாமி கோயில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தெப்பம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக மன்னார்குடி வர்த்தக சங்கத்தினர் இந்த திருவிழாவை உபயமாக ஏற்று செய்து வருகின்றனர்.