News May 15, 2024
பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது

திருமங்கலம் தென்பழஞ்சியை சேர்ந்தவர் முத்துமுருகன் (26). கம்பி கட்டும் தொழிலாளியான இவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று நள்ளிரவு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த முத்து முருகனின் மீது கண்ணன் உள்ளிட்ட சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், முத்து முருகன் காயம் அடைந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய கண்ணன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்தனர்.
Similar News
News July 8, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (08.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 8, 2025
மதுரை மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மதுரை மாநகர் கோரிப்பாளையம் சந்திப்பு அருகில் புதிய மேம்பாலம் கட்டுமானப் பணிக்கான தூண்கள் அமைக்கும் பணியானது வைகை வடகரை சாலையில் நடைபெற இருப்பதை முன்னிட்டு, வருகின்ற 10.07.2025-ம் தேதி முதல் ஆழ்வார்புரம் இறக்கம், தேனி ஆனந்தம் சாலை சந்திப்பிலிருந்து குமரன் சாலை சந்திப்பு வரையுள்ள சாலையினை தற்காலிகமாக அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தகவல்.
News July 8, 2025
மீனாட்சி அம்மன் கோயில் வரலாற்றில் இன்று.!

1939-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி வைத்தியநாத ஐயர் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கோயில்களில் நுழைய விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த புரட்சிகர நிகழ்வு 86வது ஆண்டை நிறைவு செய்து இன்றும் மதுரையில் நடைபெற்ற மாபெரும் புரட்சியாக கருதப்படுகிறது.