News November 6, 2025

பெங்களூரில் இருந்து குட்கா கடத்திய மூவர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் எம்.என்.குப்பம் சோதனை சாவடியில் இன்று நடைபெற்ற வாகன தணிக்கையின் போது பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹக்கீம் மற்றும் நிலேஷ்குமார், தெலுங்கானாவைச் சேர்ந்த விஜயகுமார் ஆகிய மூன்று பேரை கண்டமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 476 கிலோ குட்கா மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News November 6, 2025

விழுப்புரம்: பெண் பிள்ளை இருக்கா..? மாதம் ரூ.1000!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உண்டா..? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் உயர் கல்வி பயில உதவித்தொகையாக மாதம் ரூ.1000 ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 6, 2025

விழுப்புரம்: 476 கிலோ குட்கா பறிமுதல்!

image

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பு குட்கா பொருட்களை, கண்டமங்கலத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். கண்டமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு கார்களில் 476 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வருவது குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து, மடக்கி பிடித்த போலீசார் கடத்தி வந்த விஜயகுமார், நிலேஷ் குமார், ஹக்கீம் ஆகியோரை கைது செய்தனர்.

News November 6, 2025

விழுப்புரம்: பல நாள் தலைமறைவான குற்றவாளி கைது

image

விழுப்புரம்: புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(49). இவர் கடந்த 1999ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 2 1/2 ஆண்டுகளாக கோர்டில் ஆஜராகாது தலைமறைவாக இருந்து வந்த வெங்கடேசனை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது விக்கிரவாண்டி போலீசார் அவரைக் கைடு செய்தனர்.

error: Content is protected !!