News August 10, 2025
பூஷ்ப பல்லக்கிய கள்ளழகர் புறப்பாடு

மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் கள்ளழகர் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வருகிறார். அந்த வகையில் ஒன்பதாவது நாளான நேற்று இரவு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய கள்ளழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.நேரில் பார்க்க முடியாதவருக்கு SHARE செய்யவும்.
Similar News
News August 10, 2025
மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

மதுரை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.
News August 10, 2025
JUST IN: மதுரை விவசாயிக்கு நேர்ந்த சோகம்

மதுரை மாவட்டம் விளாச்சேரி அருகே மின்சாரம் தாக்கிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். தோட்டத்தில் நிலத்திற்காக போடப்பட்ட மின்சார வேலியை தொட்ட நிலையில் விவசாயி கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News August 10, 2025
அதிமுகவில் மேலும் இரு மாவட்ட செயலாளர்கள்

மதுரையில் அதிமுக நகர், புறநகர் மேற்கு, கிழக்கு என 3 மாவட்டங்கள் உள்ளன. மாவட்ட செயலாளராக உள்ள செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா ஆகியோர் ‘சீனியர்கள்’. இந்த 3 மாவட்டங்களை 5 மாவட்டங்களாக்கும்பட்சத்தில் பழனிசாமியின் தீவிர விசுவாசியும், மருத்துவரணி இணைச்செயலாளருமான டாக்டர் சரவணன் உட்பட 2 பேர் ஜாதி அடிப்படையிலும், வசதி, மக்கள் செல்வாக்கு அடிப்படையிலும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.