News December 12, 2024
பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தை சூழ்ந்த மழைநீர்

பூந்தமல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில், காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, வட்டாட்சியர் அலுவலகத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக, மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் நிலை ஏற்பட்டது. இதேபோன்று, பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மான் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
Similar News
News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 7, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.