News December 17, 2025
பூந்தமல்லிக்கு வருது மெட்ரோ ரயில்!

பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னலுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சிக்னல் கட்டமைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஓரிரு நாட்களில் ரயில்வே வாரியம் வேக சான்றிதழ் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேக சான்றிதழ் கிடைத்தால் மேற்கண்ட பாதையில் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை தீவிரமடையும்.
Similar News
News March 7, 2026
திருத்தணியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு!

திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விருப்ப மனு பெறபட்டு வருகிறது. இந்நிலையில், திருத்தணி தொகுதியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் நேற்று(மார்ச் 6) திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் நேரில் சென்று விருப்ப மனு அளித்தார். உடன் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News March 7, 2026
பூந்தமல்லி அருகே துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஒருவர் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அந்த வழியாக வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார், உடனடியாக உயிரிழந்த நபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் வேலூரைச் சேர்ந்த நித்யானந்தம் என்பது தெரியவந்தது.
News March 7, 2026
திருவள்ளூரில் இன்று இரவு ரோந்து காவலர்களின் எண்கள்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


