News August 15, 2025
பூட்டிய குடோனில் வாலிபர் வெட்டி படுகொலை

மாதவரம், அம்பேத்கர் நகர், அருகே தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தின் இரும்பு குடோன் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டியே உள்ளது. இந்த கிடங்கில் இருந்து நேற்று காலை திடீரென அலறல் சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது மாதவரம், பர்மா காலனியை சேர்ந்த சந்துரு என்பவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
Similar News
News August 15, 2025
தேசியக்கொடி ஏற்றிய ஆட்சியர் பிரதாப்!

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில், ஆட்சியர் பிரதாப் தேசியக்கொடி ஏற்றினார். எஸ்.பி. விவேகானந்த சுக்லாவுடன் இணைந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மூவர்ண பலூன்கள், சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. காவல்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
News August 15, 2025
திருவள்ளூர்: இலவச AI பயிற்சி, ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்!

திருவள்ளூர் மக்களே, AI துறையில் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு, தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இலவசப் பயிற்சி அளிக்கிறது. இதற்கு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, அல்லது டிகிரி முடித்தவர்கள் <
News August 15, 2025
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்த்து

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, தனது சார்பாக, அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.