News January 26, 2026

புழல் சிறையில் கைதி சாவு!

image

திருவள்ளூர்: புழல் விசாரணை சிறையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜோசப்(49) என்பவர் கஞ்சா வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜன.21ஆம் தேதி இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(ஜன.25) ஜோசப் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News January 30, 2026

திருவள்ளூர்: NABARD வங்கியில் 162 காலியிடங்கள்! APPLY

image

திருவள்ளூர் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 30, 2026

திருவள்ளூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் ஊதிய மானியம் திட்டத்தின் கீழ், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் ஒருவருக்கு மாதம் ரூ.2,000 என ஆண்டிற்கு ரூ.24,000 ஊதிய மானியம் வழங்கப்படும். தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்கள் https://forms.gle/KpThjwGTCKVGiYfW9 என்ற இணையதளத்தில் (பிப்.2) க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!