News March 24, 2025
புளியங்குடி: மூளைச்சாவு அடைந்தரின் உறுப்புகள் தானம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த அருணாச்சலம்(58) என்பவர் வீட்டின் தகர கூரையில் கால் வைத்தபோது கீழே விழுந்து, தலையில் அடிபட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்ற மூளைச்சாவு அடைந்ததால் உறவினர்கள் ஒப்புதலுடன் அவரது உடல் உறுப்புகள் நேற்று(மாரச் 23) இரவு தானம் பெறப்பட்டன. இன்று அரசு சார்பில் இறுதி மரியாதை செய்து அவரது உடல் ஒப்படைக்கப்பட உள்ளது.
Similar News
News September 24, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (23-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம்.அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100ஐ தொடர்பு கொள்ளலாம்.
News September 23, 2025
அரசியல் கட்சி ஆவணங்களுடன் சமர்ப்பிக்க ஆட்சியர் தகவல்

தென்காசி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மக்களாட்சி கட்சி பதிவு செய்யப்பட்ட முகவரி 57 ஜக ஜீவன் ராம் தெரு பரும்பு ஆழ்வார்குறிச்சி என்று இருக்கும் நிலையில் மக்களாட்சி கட்சியின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அக்டோபர் ஒன்பதாம் தேதி உரிய ஆவணங்களுடன் தலைமை தேர்தல் அலுவலர் முன் ஆஜராக வேண்டும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
News September 23, 2025
தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இரவு 7 மணி வரை தென்காசி மக்கள் மழையினை கவனத்தில் கொண்டு தங்களது பணிகளை திட்டமிடும் படி அறிவுறுத்தல். *ஷேர் பண்ணுங்க