News September 9, 2025

புளியங்குடி புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பு

image

புளியங்குடி நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்த சாம் கிங்ஸ்டன் சங்கரன்கோவில் நகராட்சிக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் , பணிபுரிந்த நாகராஜ் புளியங்குடி நகராட்சி ஆணையாளராக பணி மாறுதல் செய்யப்பட்டார். புதிதாக பொறுப்பு ஏற்ற ஆணையாளரை நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திர பாண்டியன், துணை தலைவர் அந்தோணிசாமி, மற்றும் பத்திரம் சாகுல் ஹமீது, அனைத்து கவுன்சிலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News September 9, 2025

கீழப்பாவூர் அருகே தீ விபத்து – 2 லட்சம் சேதம்

image

நாகல்குளம் ஆசாரி தெருவைச் சேர்ந்த நாகராஜன்(35), கீழப்பாவூர் அருகே முத்து பர்னிச்சர் ஒர்க் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது கடையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்க, ஆலங்குளம் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில், சுமார் 2 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. இருப்பினும் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தப்பியது.

News September 9, 2025

BREAKING தென்காசிக்கு வருகை தரும் விஜய்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி நவ.11 அன்று தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

News September 9, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பதிவு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதளத்தில் இருந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்து பகிரப்பட்டுள்ளது. “சாலையில் நடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்ற எச்சரிக்கை மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செய்தியை புகைப்படத்துடன் அனைவரும் புரிந்து கொள்ளும்படி பகிர்ந்துள்ளது. *ஷேர்

error: Content is protected !!