News March 22, 2025
புளியங்குடி அந்தோணிசாமிக்கு ‘வேளாண் வேந்தர்’ விருது

புளியங்குடியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. ‘முன்னோடி இயற்கை விவசாயி’யான இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மறுதாம்பு கரும்பு சாகுபடி, எலுமிச்சை, மரப்பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்குகிறார். இவரின் இயற்கை விவசாயப் பணிகளைப் பாராட்டி சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று(மார்ச் 22) ‘வேளாண் வேந்தர்’ விருது அளித்துள்ளது.
Similar News
News September 22, 2025
தென்காசி: கிராம வங்கியில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், <
News September 22, 2025
குற்றாலம் பராசக்தி பீடத்தில் நவராத்திரி விழா தேதி!

குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட திருகுற்றாலநாதர் கோயிலில் வரும் செப்டம்பர்.23ம் தேதி நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாலை 4மணிக்கு மேல் சித்திரை நட்சத்திரத்தில் திருவிழா துவங்குகிறது. மாலை 6 மணிக்கு மேல் அபிஷேகம் இரவு 8 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பராசக்தி பீடத்தில் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.
News September 22, 2025
தென்காசி: மழை நெருங்குது! – மக்களுக்கு அதிகாரி அறிவுரை

தென்காசியில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.