News January 4, 2025

புலவஞ்சி ஊராட்சி கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர்

image

மதுக்கூர் ஒன்றியம் புலவஞ்சி ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன் அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை சந்திரசேகரன், திரு.கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாகராஜன் , பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 23, 2025

கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என 28 வருடங்களுக்கு மேலாக கும்பகோணம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே கும்பகோணம் மாநகர அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சார்பில், கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

News August 23, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 22, 2025

தஞ்சாவூர்: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு!

image

தஞ்சை மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 18004251757 என்ற எண்ணை அழைக்கலாம். SHARE IT!

error: Content is protected !!