News October 26, 2025
புயலாக மாறும் ‘மோன்தா’-வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என்றும், மோன்தா புயல் சென்னைக்கு தென்கிழக்கில் 780 கிமீ தொலைவில் உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று மாலை புயலாகவும் 28-ம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 10, 2026
சென்னை: முகவரி சொன்ன பெண்ணுக்கு கொடூரம்

நொளம்பூர் மற்றும் முகப்பேர் சாலை யில் நடந்து சென்ற பெண்களிடம், முகவரி கேட்பது போல நெருங்கிய நபர் ஒருவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் திருமங்கலம் மகளிர் போலீசார், சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், நொளம்பூரைச் சேர்ந்த பயாஸ் அகமது (45) என்பது தெரிந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
News February 10, 2026
சென்னையில் கொடூரம்; குடும்பத்திற்கே அரிவாள் வெட்டு!

டி.பி.சத்திரம், ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (50). கடந்த 5 – ந் தேதி இரவு வீட்டினருகே நடந்து வரும்போது, அவரது அண்ணன் மகனான சந்தோஷ் என்பவர் இவரை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த பரமசிவத்தின் மனைவி, மகளையும் தாக்கியுள்ளார். புகாரின் பேரில் டி.பி சத்திரம் போலீசார் ராணிப்பேட்டை சொறையூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (25) என்பவரை கைது செய்தனர்.
News February 10, 2026
சென்னை: தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி

நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் தர்ஷிகா (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9 – ம் வகுப்பு படித்து வந்தார். இவர் செல்போனில் அதிக நேரம் விளையாடியதால் அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த தர்ஷிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*


