News August 5, 2025

புனித பயணம் மேற்கொள்ள மானியம்- ஆட்சியர் அறிவிப்பு

image

பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் நாக்பூர் தீக் ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர திருவிழாவிற்கு புனித பயணம் சென்று வரும் 150 நபர்களுக்கு மானியமாக ரூ.5000 வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு நவம்பர் 30-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 5, 2025

திருச்சி மாவட்டத்தில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

image

தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் திருச்சியில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த, ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் காவல் நிலையம், காட்டுப்புத்தூர், உப்பிலியபுரம், புத்தாநத்தம், வளநாடு, பெட்டவாய்த்தலை, கல்லக்குடி உள்ளிட்ட 8 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டது.

News August 5, 2025

திருச்சி: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

திருச்சியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 5, 2025

திருச்சியில் திருமாவளவன் பேட்டி

image

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் கூட்டணியாகவே உருவாகவில்லை. அதில் பாஜக-அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன. அந்த கூட்டணியிலே தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி வருவது அவர்களின் உறுதிபாடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது’ என்றார்.

error: Content is protected !!