News April 14, 2024

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று தமிழர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்கும் வகையில் தங்கள் வாழ்வில் எண்ணற்ற வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அனைவருக்கும் இனிய தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

Similar News

News October 17, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி – காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (அக்.16) இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News October 16, 2025

கள்ளக்குறிச்சி: 1 ஆண்டு மருத்துவ படிப்பு – ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த ஒரு வருட சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான நேரடி சேர்க்கை வருகிற 14.11.2025 தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அறிவித்துள்ளார். மேலும், முதலில் வருபவர்களுக்கே சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

கள்ளக்குறிச்சி: மழைக்கால அவசர தொடர்பு எண்கள் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கால கட்டுப்பாட்டு அறைகளுக்கான தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை இலவச எண் 1077, தொலைபேசி எண் 04151-228801, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் கட்டுப்பாட்டு அறை எண் 04151 – 222493, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கட்டுப்பாட்டு அறை எண் 04153-252312 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!