News November 16, 2024
புத்தக கண்காட்சியில் அறிவியல் செயல்முறை – ஆட்சியர் தகவல்

தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3வது பொதிகை புத்தக கண்காட்சி நேற்று முதல் தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாள்தோறும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் அறிவியல் செயல்முறை வருகிற 19ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக்கொண்டார்.
Similar News
News March 1, 2026
தென்காசி இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தென்காசி மக்களே, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 1, 2026
தென்காசி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

தென்காசி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தென்காசி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.
News March 1, 2026
தென்காசி: வாய்ப்பு கொடுத்தால் தென்மாவட்டங்களில் போட்டி- VCK

சிவகிரியில் நேற்று அம்பேத்கர் முழு உருவச் சிலையை விசிக தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும். வாய்ப்பு கொடுத்தால் தென்மாவட்டங்களில் போட்டியிடுவோம் எனவும், கூடுதல் தொகுதிகள் கேட்கப்போவதாகவும் கூறினார். மேலும் OPS வருகையால் தென்மாவட்டங்களில் திமுக கூட்டணி வலுப்பெறும் எனவும், விஜய் வருகையால் எந்த பாதிப்பும் இல்லை என கூறினார்.


