News August 17, 2024
புத்தகத் திருவிழாவில் வினாடி வினா போட்டிகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா போட்டிகள் நாளை மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையாளராக இதில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
பயிர்காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016 – ம் ஆண்டுமுதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2025-26 ராபிபருவத்தில், வேளாண் பயிர்களுக்கு உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி உடனடியாக பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் முகாம்.. கலெக்டர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அரசு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமினை மாற்றத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
விருதுநகர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

விருதுநகர் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT


