News August 5, 2025
புதுவை: 10% இட ஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியீடு

புதுச்சேரியில் உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கான கோப்பு தயார் செய்து, லண்டன் சென்றிருந்த கவர்னருக்கு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. கோப்பை ஆய்வு செய்த கவர்னர் கைலாஷ்நாதன், ஒப்புதல் வழங்கி, கடந்த வாரம் தலைமைச் செயலருக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து நேற்று (ஆக.04) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 5, 2025
மானிய விலையில் நெல் விதை விற்பனை!

காரைக்கால் வேளாண்துறை மூலம் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ், நெல் விதை CR1009, IR 20, BPT 5204, KKLR- 2, DRR DHAN 58 ஆகிய ரகங்கள் பொது பிரிவு விவசாயிகளுக்கு ஒரு கிலோ விதை ரூ10/- க்கும் அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் கணேசன் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
News August 4, 2025
புதுவையில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !

புதுவையில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !
➡️திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
➡️புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்
➡️திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில்
➡️திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில்
➡️தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில்
➡️திருவண்டார்கோயில் பஞ்சனதீசுவரர் கோயில்
➡️வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில்
இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க !
News August 4, 2025
புதுச்சேரியில் ஆப் மூலம் மோசடி; போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் சைபர் குற்றவாளிகள் பாகிஸ்தான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். மேலும், சமூக வலைத்தளங்களில் வரும் போலியான உடனடி கடன் செயலி விளம்பரங்களை நம்பி பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.