News November 15, 2025
புதுவை: வாலிபர் கொலையில் 9 பேர் கைது

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முருகன் மகன் சந்தோஷ், ரெயின்போ நகர் பகுதியில் சாரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், டிவி நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும் நடந்த தகராறில் சந்தோஷ் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரிய கடை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, நேற்று 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 15, 2025
புதுவையில் கத்தியுடன் சுற்றிய வாலிபர்

புதுவை ரெட்டியபார்பாளையம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, உழவர்கரை வயல்வெளி பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் போலீசார் அவரை சோதனையிட்டபோது, அவரிடம் கத்தி இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் உழவர்கரைச் சேர்ந்த பிரேம்குமார் என தெரியவந்தது. இதனையடுத்து உடனே அவரை கைது செய்தனர்.
News November 15, 2025
புதுவை: போலி பங்கு சந்தை மூலம் ரூ.2.5 கோடி மோசடி

புதுவை ஜி.என்.பாளையத்தைச் சேர்ந்த காண்டிராக்டர் ஒருவருக்கு சமூக வலைதளத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என தகவல் வந்துள்ளது. இதனை நம்பி அவர் சுமார் ரூ.2.5 கோடி முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு ரூ.12.5 லட்சம் லாபம் கிடைத்ததாக காண்பித்துள்ளது. ஆனால் அதனை தனது வங்கிக்கு மாற்ற இயலாது, தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
News November 15, 2025
புதுச்சேரி: காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம்

ஏனாம் பிராந்திய காவல் ஆய்வாளா் ஆடலரசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஒரு வழக்கு விசாரணைக்காக புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, 4 போலீசாருடன் வேனில் ஏனாம் சென்ற போது, அவர்கள் கள் குடிப்பது போலவும், குத்தாட்ட பாடல்களைப் போட்டு கொண்டு நடனமாடி மகிழ்ந்தது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இந்த நிலையில், காவல் ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்து டிஜிபி நேற்று உத்தரவிட்டார்.


