News November 1, 2025
புதுவை: வாய்க்காலில் விழுந்து விவசாயி பலி

புதுவை, பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்திக்கு நுரையீரலில் பிரச்சினை இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அவர் அங்குள்ள வாய்க்காலில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 1, 2025
புதுச்சேரி: நூல் வெளியீட்டு விழா

புதுச்சேரி, ஓய்வு பெற்ற தமிழ் விரிவுரையாளர் லோகநாதன் எழுதிய நுால்களான நாட்டுபுற மக்களின் நம்பிக்கைகளும், சடங்குகளும்’ என்ற ஆய்வு நுால் மற்றும் ‘குல்லா போட்ட கத்திரிக்காய்’ என்ற குழந்தை பாடல்கள் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி நூல்களை வெளியிட்டார். அதனை சபாநாயகர் செல்வம் பெற்றுக்கொண்டார்.
News November 1, 2025
புதுவை: மது போதையில் ரகளை செய்த இளைஞர் கைது

லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் பொது மக்களிடம் வாலிபர் ஒருவர் மது போதையில் ரகளை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் லாஸ்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று
ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் லாஸ்பேட்டை சதீஷ் குமார்( 27), என்பது தெரிய வந்தது. பின் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
News November 1, 2025
புதுவை: மருத்துவ படிப்பில் கூடுதலாக இடங்கள்

புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் முதுகலை மருத்துவம் படிக்க 56 இடங்கள் உள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி அதனை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிடம் புதுவை அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி இந்த ஆண்டு கூடுதலாக 16 இடங்களை நிரப்ப மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியது. இதனால் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை இடங்கள் 72 ஆக உயர்ந்துள்ளது.


