News April 16, 2025
புதுவை: வங்கி அதிகாரி என கூறி 72 ஆயிரம் மோசடி

முருங்கப்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார். அப்போது வங்கி கணக்கிற்கு பான் கார்டு விவரங்களை புதுப்பிக்குமாறு ஒரு லிங்க்கை அனுப்பி உள்ளார். அந்த லிங்க்கை வழியாக கார்த்திக் உள்ளே சென்றவுடன் அவரது வங்கி கணக்கிலிருந்து 72,800 எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் இன்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
Similar News
News January 30, 2026
புதுவை: காவலர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள காவலர் (போலீஸ் கான்ஸ்டபிள் ) பதவிக்கான எழுத்துத் தேர்வு, வரும் (8.2.2026) ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் உள்ள ஐந்து மையங்களில் நடைபெற இருக்கின்றன. இத்தேர்வுக்கான அனுமதிச்சீட்டை தேர்வர்கள் https:// recruirtement .py.gov.in என்னும் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
News January 30, 2026
புதுச்சேரி: பாஜக தேர்தல் படிவம் இன்று வெளியீடு

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில், மாநில தலைவா் வி. பி. ராமலிங்கம் நேற்று செய்தியாளா்களிடம் கூறும்பொழுது, சட்டப்பேரவைத் தோ்தல்-2026 ஐ எதிா்கொள்ளும் வகையில் பாஜக சாா்பில் மக்களிடம் கருத்துக் கேட்டு தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காகப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிவத்தை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா கடற்கரை காந்தி திடல் அருகே இன்று வெளியிடுகிறாா் என்றார்.
News January 29, 2026
புதுச்சேரி: திருமண தடை நீக்கும் சிறப்பு ஸ்தலம்!

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாடலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!


