News October 25, 2024

புதுவை: முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

image

புதுச்சேரி அரசு செயலர் பங்கஜ்குமார் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப்பணி துறையில், இளநிலை பொறியாளர் மற்றும் ஓவர்சீர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும், 27ஆம் தேதி, புதுச்சேரியில் 6 மையங்களில் நடக்கிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து செய்வதோடு, பிற தேர்வுகளில் பங்கேற்க தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

Similar News

News August 9, 2025

புதுச்சேரியில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 9) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகார் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News August 8, 2025

புதுவை: மாணவர்களுக்கு பருவ நிலா கருத்தரங்கம்

image

புதுவைத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகமும் மயூரி சித்திர நாட்டியாலயாவும் இணைந்து நடத்திய பருவ நிலாக் கருத்தரங்கம் அரியாங்குப்பம் முத்தமிழ்க் கலை இல்லத்தில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் முனைவர் இராச.குழந்தைவேலனார் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தேசிய விருதாளர் மண்ணாங்கட்டி மொழி வாழ்த்து வழங்கினார். இதில் தமிழ்மாமணி முனைவர் வேல்முருகன் வரவேற்புரை வழங்கினார்.

News August 8, 2025

புதுவை: எக்ஸ்போ பொருட்காட்சி திறந்து வைப்பு

image

புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் நடைபெறும் தினமலர் எக்ஸ்போ பொருட்காட்சியினை இன்று (ஆகஸ்ட் 8) வெள்ளிக்கிழமை காலை முதலமைச்சர் என் ரங்கசாமி சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் பொதுப்பணித்துறை அமைச்சர் க லட்சுமிநாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொருட்காட்சியினை திறந்து வைத்தனர்.

error: Content is protected !!