News January 17, 2026
புதுவை: மன உளைச்சலால் வழக்கறிஞர் தற்கொலை

பாகூர், குருவிநத்தம் இளையபெருமாள் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இருதய அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். அதன்பின், வழக்கம் போல் கோர்ட்டிற்கு சென்று வந்த அவர், கடந்த 6 மாதங்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி ஜிப்மரில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.
Similar News
News February 2, 2026
புதுச்சேரி: சர்வீஸ் பிளேஸ்மென்ட் முறை – ஆளுநர் ரத்து

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன், அரசுத் துறைகளில் ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு தற்காலிகமாக பணியாளர்களை மாற்றும் ‘சர்வீஸ் பிளேஸ்மென்ட்’ முறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இத்தகைய மாற்றங்கள் செய்ய, ஆளுநரின் முன் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்குப் பணிச்சுமை அதிகரிப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
புதுச்சேரி: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
புதுச்சேரி கவர்னர் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் சொந்த பணிக்கு அழைத்துக் கொள்வது வழக்கமானது. இதனால் அனைத்து துறைகளிலும் மற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதாக கவர்னர் கைலாஷ்நாதனுக்கு புகார் சென்றது. இதை தொடர்ந்து இந்த சர்வீஸ் பிளேஸ்மென்டை நேற்று அதிரடியாக ரத்து செய்ய கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


