News December 23, 2025

புதுவை: மது போதையில் அட்டூழியம்!

image

திருக்கோவிலூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை பெயிண்டரான உள்ளார். இந்நிலையில் புதுச்சேரி திருபுவனை மேம்பாலம் அருகில் நேற்று மது போதையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை தகாத வார்த்தையால் பேசி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். தகவலறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

Similar News

News December 27, 2025

புதுவை: போலி மருந்து வழக்கு CBI-க்கு மாற்றம்

image

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தை CBI விசாரிக்க உள்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் இதுவரை 16-நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கை CBI மற்றும் NIA விசாரிக்க துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இந்த நிலையில், இவ்வழக்கை CBI-க்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

News December 27, 2025

புதுவை: திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் கலெக்டர் ஆய்வு

image

காரைக்கால், திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என, கலெக்டர் ரவிபிரகாஷ் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். மேலும், காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 27, 2025

புதுச்சேரி: உதவித்தொகை உயர்வு அறிவிப்பு

image

புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். குடும்பத்தலைவிகளுக்கு அரசு வழங்கி வரும் ரூ.1,000 உதவித் திட்டம், ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு விரைவில் வழங்கப்படும். மேலும், கோதுமை போல் 1 கிலோ கேழ்வரகு மாவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

error: Content is protected !!