News August 31, 2025
புதுவை மக்களுக்கு சீனியர் எஸ்.பி எச்சரிக்கை

புதுச்சேரி மக்களுக்கு சீனியர் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுதுள்ளார். அதில், ஆன்லைனில் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி, வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால், அதனை நம்பி தர வேண்டாம் எனவும், அதனை மீறி அவர்களிடம் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளை கொடுத்து அதன் மூலம் சைபர் மோசடி நடந்ததால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News September 1, 2025
புதுச்சேரி: தெருநாய்கள் அச்சுறுத்தலா? உடனே புகார்

புதுச்சேரியில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களின் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களை கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம். உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 0413-2227518 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE IT
News September 1, 2025
காரைக்காலில் புதிய துணை மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

காரைக்கால் மாவட்டத்தின் புதிய துணை ஆட்சியராக பூஜா அவர்களை நியமித்து உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்கால் துணை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட துணை மாவட்ட ஆட்சியர் பூஜா அவர்களுக்கு அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
News September 1, 2025
புதுச்சேரி: அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்! மிஸ் பண்ணாதீங்க!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் இளைஞர்களே நாகையில் உள்ள கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. செப் 18 முதல் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிகல், க்ளர்க் , பிரிவுகள் சேர்வதற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும். புதுவையை சேர்ந்தவர்கள் செப். 18 ஆம் தேதி கலந்துகொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே <