News December 14, 2025

புதுவை: போலிச்சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு

image

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், கேரளாவை சேர்ந்த சித்திக் (21) M.Com படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் அவரின் சான்றிதழை சரிபார்த்த போது, அவை போலி சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக கண்காணிப்பு குழு சிறப்பு அதிகாரி வம்சிதரரெட்டி அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 2, 2026

புதுச்சேரி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு நாளை (03.03.2026) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் தேர்வுகள் இருந்தால் திட்டமிட்ட படி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

புதுச்சேரி: FREE-அ டாக்டர பாக்கனுமா? Click Here

image

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

புதுச்சேரியில் +2 தேர்வெழுதிய 7,585 மாணவர்கள்

image

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, இன்று துவங்கி வரும் 26ம் தேதிவரை நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியில் உள்ள 84 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,979 மாணவர்கள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 606 மாணவ மாணவிகள் என மொத்தம் 7,585 பேர் எழுதினர்.

error: Content is protected !!