News January 19, 2026
புதுவை: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

புதுவை, வில்லியனூர் SI திருமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கோபாலன் கடை பகுதியில், ஒருவர் பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சரண் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Similar News
News February 15, 2026
புதுச்சேரி: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 15, 2026
புதுச்சேரி மக்களே இலவச WIFI வேண்டுமா?

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News February 15, 2026
புதுச்சேரியில் வந்தே மாதரம் கடலோர சைக்கிள் பேரணி

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு, புதுச்சேரி சுற்றுலாத் துறை மற்றும் PTDC இணைந்து ‘CISF வந்தே மாதரம் கடலோர சைக்கிள் பேரணி 2026’ இன்று (பிப்.15) காலை 6.00 மணிக்கு காந்தி திடலில் தொடங்கியது. இந்தியாவின் நீண்ட கடற்கரைப் பாதையை ஒட்டிச் செல்லும் இந்த பேரணி, கடலோரப் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் தேசிய ஒற்றுமை என்பதை வலியுறுத்தும் நோக்குடன் நடத்தப்படுகிறது.


