News October 17, 2025

புதுவை: பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டல்

image

புதுச்சேரி பூமியான்பேட்டை, பாவாணர் நகர் அருகே அவ்வழியாக செல்லும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த பாவாணர் நகர், 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை நேற்று கைது செய்தனர்.

Similar News

News October 18, 2025

காரைக்கால்: கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

image

காரைக்கால் நகராட்சி இந்த ஆண்டு தொடங்க உள்ள வடகிழக்குப் பருவ மழையினை எதிர்கொள்ளும் விதமாக காரைக்கால் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது. ஆகவே பொதுமக்கள் 04368 222427 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தங்களின் பகுதிகளில் உள்ள மழை சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 17, 2025

புதுச்சேரி: ரூ.29,000 சம்பளம்.. மத்திய அரசு வேலை!

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 17, 2025

புதுவை: காவல்துறை மோப்ப நாய் உயிரிழப்பு!

image

புதுச்சேரியின் காவல்துறையில் நடைபெற்ற பல்வேறு கிரிமினல் மற்றும் கொலை குற்றங்களை கண்டறிய பல வருடங்களாக திறம்பட செயல்பட்டு, ஓய்வு பெற்ற
காவல்துறையின் அர்ஜுன் என்ற பெயருடைய மோப்ப நாய் திடீரென்று உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் உரிய மரியாதையுடன் மோப்ப நாய் அர்ஜூனை அடக்கம் செய்தனர்.

error: Content is protected !!