News August 12, 2025
புதுவை: பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
Similar News
News August 12, 2025
ரெஸ்டோ பார் மாணவர் கொலை-6 பேர் கைது!

புதுவை ரெஸ்டோ பாரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராற்றில், சென்னை தனியார் கல்லுாரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரில் சிறப்புக் குழு தீவிர விசாரணை மூலம் நேற்று (ஆக.11) 6 பேரை கைது செய்தனர். மேல் விசாரணையில் அசோகராஜ் என்பவர் சம்பவத்தில் கத்தியால் குத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
News August 12, 2025
புதுவையில் இன்று இந்தப் பகுதிகளுக்கு மின்தடை!

புதுவை, சேதராப்பட்டு துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று (ஆக.12) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சேதராப்பட்டு தொழிற்பேட்டை மேற்குப் பகுதி, கிழக்குப் பகுதி, பழைய காலனி, புதிய காலனி, சேதராப்பட்டு கிராமம், முத்தமிழ் நகர், கரசூர், கரசூர்பேட், கரசூர் – வானுார் சாலை, துத்திப்பட், உயர் மின்னழுத்தத் தொழிற்சாலைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
News August 11, 2025
புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களுக்கு சீல் வைத்த கலால் துறை

புதுச்சேரியில் ரெஸ்டோ பார் கொலை எதிரொலியாக, புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து புதுச்சேரி அரசு கலால் துறை சீல் வைத்துள்ளது.