News September 28, 2025

புதுவை: பணம் இல்லாததால் தாய் தற்கொலை

image

புதுவை மடுகரை, பாலமுருகன், இவரது மனைவி மகேஸ்வரி, இவர்களின் மகள் அனுஸ்ரீக்கு வரும் 5ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக பாலமுருகன் & மகேஸ்வரி, பல இடங்களில் கடனாக பணம் கேட்டுள்ளனர். எங்கும் கடன் கிடைக்காதால் மனமுடைந்த மகேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 5, 2026

வில்லியனுார்: மனைவி பணம் தராததால் கணவன் தற்கொலை!

image

வில்லியனூர் பைபாஸ், பாரதி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல், குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பணம் தராததால் மனைவியுடன் கோபித்துக்கொண்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2026

புதுச்சேரியில் மாணவர் ஆர்ப்பாட்டம்

image

வெனிசுலா நாட்டின் வளங்களை திருடும் நோக்கில், போர் வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டிப்பதாகவும், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த கோரியும் புதுச்சேரியில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News January 5, 2026

புதுவை: குடிப்பழக்கத்தால் பறிபோன உயிர்!

image

புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் உஸ்மான்(42) தொழிலாளி. இவர் மனைவி ஷாஜகான் பேகம் இறந்ததால் குடிபழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!