News December 29, 2025

புதுவை: துணை குடியரசு தலைவர் புகழாரம்

image

புதுச்சேரியில், இன்று (29.12.2025) புதுவை வந்துள்ள துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியது, புதுவை ஒரு தொன்மையான நாகரீகம் மட்டுமின்றி அன்பு அரவணைப்பு போன்ற நிரந்தர மாண்புகளை உலகிற்கு பறைசாற்றும் நகரமாகவும் புதுவை திகழ்வதாக கூறினார். நிகழ்வின் போது புதுவை முதல்வர், உள்துறை அமைச்சர், ஆளுநர் என பலரும் உடனிருந்தனர். துணை குடியரசுத் தலைவருக்கு மரியாதை சே செய்யப்பட்டது.

Similar News

News December 30, 2025

புதுவை: 10th போதும்-போஸ்ட் ஆபிஸில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

News December 30, 2025

புதுவை: பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

image

காரைக்கால் நகர போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தைக்கால் தெரு பின்புறம் உள்ள பொது இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் காரைக்காலைச் சேர்ந்த திருமுருகன், சக்திவேல், ராமன், குருபிரசாத், விஜய், திரௌபதி வெள்ளைசாமி, சவுந்தரராஜன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News December 30, 2025

புதுவை: குளத்தில் மூழ்கிய கூலித்தொழிலாளி பலி

image

காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(29). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் குளத்தில் மீன் பிடித்தபோது திடீரென குளத்தில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காலாப்பட்டு தீயணைப்பு வீரர்கள், ராஜாவை தேடினர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் ராஜாவை நேற்று மதியம் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.

error: Content is protected !!