News February 12, 2025
புதுவை: தீயணைப்பு பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

புதுவை தீயணைப்பாளர் & தீயணைப்பு வாகன ஓட்டுநர் நிலை -3 பணியிடத்திற்கான தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தீயணைப்பாளர் (ஆண்கள்) பொதுப் பிரிவில் ஹரிகரன் 82.25 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மோகன்ராஜ் 70.26 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பெற்றனர். பெண்கள் பொது பிரிவில் அனந்தமொழி 69.75 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.
Similar News
News September 3, 2025
புதுவை ஜிப்பர் நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு!

புதுவை, மத்திய அரசு விடுமுறை தினமான 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மிலாடி நபியை (முஹம்மது நபியின் பிறந்தநாள்) முன்னிட்டு புதுச்சேரி மாநில ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்று ஜிப்மர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க..!
News September 3, 2025
புதுச்சேரியில் மது கடைகள் மூட உத்தரவு!

புதுச்சேரியில் வரும் 05.09.2025 (வெள்ளிகிழமை) அன்று மீலாது நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, கலால் துறை ஆணையர் ஆணைப்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.
News September 3, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் வாட்ஸ் அப் குழுக்களிலோ அல்லது தெரியாத நபர்களிடமிருந்தோ RTO E Challan என்கின்ற போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்துமாறு லிங்க் ஒன்று அனைவருக்கும் பகிரப்படுகிறது. அதனை நீங்கள் தொட்டாலோ அல்லது உள்ளே சென்று உங்களது தகவல்களை பதிவிட்டாலோ உங்களது பணத்தினை இழக்க நேரிடும். ஆதலால் யாரும் இத்தகைய RTO E Challan என்ற லிங்க் ஐ தொட வேண்டாம்.