News November 7, 2025

புதுவை: சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

image

மெகபூ பாஷா என்ற சட்டக் கல்லூரி மாணவர் கருவடிக்குப்பம் மெயின்ரோட்டில் தனது உறவினரின் சூப் கடையில் பகுதி நேர வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று சூப் கடைக்கு வந்த வைத்திக்குப்பம் கடவுள், தேவா, கண்ணன் ஆகியோர் பீப் பக்கோடா கேட்டனர். அதற்கு மெகபூ பாஷா சற்று காத்திருக்க கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மெகபூ பாஷாவை சரமாரியாக தாக்கினர். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்

Similar News

News November 7, 2025

புதுவை: நடைபாதையில் இறந்து கிடந்த முதியவர்

image

புதுவை கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் அருகில் நேற்று நடைபாதையில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த லாஸ்பேட்டை போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 7, 2025

புதுவை: நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல்

image

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட மோர்சார் தெரு, குட்டவாப்பு தெரு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மோட்டார் சைக்கிளில் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 3 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 6, 2025

புதுச்சேரி: வனக்காப்பாளர் பணியில் இருந்து விடுவிப்பு

image

புதுச்சேரி அரசின் தலைமை செயலர் சரத் சவுகான் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் புதுச்சேரி வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதுவை அரசு பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று புதுச்சேரி மாநில தலைமைச் செயலர் சவுகான் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!