News October 28, 2025
புதுவை: கால்நடை உரிமையாளர் மீது வழக்கு!

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோட்டுச்சேரியை அடுத்த திருவேட்டக்குடி மெயின் சாலை சோனியா காந்தி நகர் அருகே 5 பசு மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் திரிந்தது. அதைத் தொடர்ந்து, மாடுகளின் உரிமையாளரான திருவேட்டக்குடி வெங்கட்ராமன் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
Similar News
News October 28, 2025
புதுவை: ஏனாமில் பேரிடர் மீட்புக்குழு வருகை

மோன்தா புயல் இன்று மாலை ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி காக்கிநாடா அருகிலுள்ள புதுவை பிராந்திய பகுதியான ஏனாமிற்கும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விசாகப்பட்டினத்தில் இருந்து ஏனாமிற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வந்துள்ளனர். மேலும் புதுவையிலிருந்து ஐ.ஆர்.பி.என். வீரர்களும் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.
News October 28, 2025
“அரசை நம்பியிருந்தால் சிரமம்”-முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நேற்று புதிய மின்சாரப் பேருந்தை தொடங்கி வைத்து முதல்வர் ரங்கசாமி பேசும்பொழுது, “அரசை மட்டும் நம்பியிருந்தால் சிரமம். பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையில், அதில் பணியாற்றுவோர் செயல்பட வேண்டும். விரைவில் பி.ஆர்.டி.சி மூலமும் பஸ்கள் வாங்கவுள்ளோம். அதன்படி மொத்தம் 100 பஸ்களுக்கு மேல் வரும்.” என தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
புதுவை: ரூ.30,000 சம்பளத்தில் அஞ்சல் துறை வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…


