News October 16, 2024
புதுவை, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலுக்கு புதுவை மாநில அரசு விடுமுறை என உத்தரவிட்டுள்ளது. மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News September 14, 2025
புதுவை: போக்சோ வழக்கில் முதியவர் கைது

புதுவை, மேட்டுப்பாளையத்தில் 11 வயது சிறுமி நேற்று முன்தினம் டியூஷனில் படித்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முதியவர் ஒருவர், சிறுமியை அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின் சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது, அந்நபர் அதேபகுதியை சேர்ந்த புஷ்பநாதன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News September 14, 2025
புதுவை: டிரைவர்களுக்கு போக்குவரத்து எஸ்பி எச்சரிக்கை

புதுச்சேரி வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீசார்- ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று(செப்.13) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு போக்குவரத்து சீனியர் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது, ஆட்டோக்களுக்கான உரிய ஆவணங்களை சரியான முறையில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்தார்.
News September 14, 2025
புதுவையில் ஆசிரியர் தற்கொலை; போலீசார் விசாரணை

புதுவை மாநிலம் நெடுங்காடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வி. தனியார் பள்ளி ஆசிரியரான இவருக்கு, 2 ஆண்டிற்கு முன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு காலதாமதம் செய்ததால், விரக்தியடைந்த அவர் விசம் குடித்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.