News November 16, 2024
புதுவை கலெக்டர் எச்சரிக்கை

புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் நேற்று கூறியதாவது, “சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிகொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் அகற்றவில்லை. இதனால் இடித்து அகற்றி வருகிறோம். மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்தால் முதலில் அபராதம், அடுத்து வழக்கும் பதிவு செய்யப்படும்” என எச்சரித்தார்.
Similar News
News March 2, 2026
புதுச்சேரி: அதிகாரிகளுக்கு முக்கிய பயிற்சி

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, காரைக்கால் மாவட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்த காணொளி வழிப் பயிற்சி அளிக்கப்பட்டது. ராணுவத்தினர் மற்றும் அரசுப் பணியாளர்கள் போன்ற சேவை வாக்காளர்களின் விபரங்களைப் பதிவு செய்தல் மற்றும் பராமரிப்பது குறித்து விளக்கப்பட்டது.
News March 2, 2026
புதுச்சேரியில் இன்று +2 பொதுத்தேர்வு தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, இன்று துவங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியில் உள்ள 84 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,979 மாணவ, மாணவிகள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 606 மாணவ மாணவிகள் என மொத்தம் 7,585 பேர் எழுத உள்ளதாக கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.
News March 1, 2026
புதுச்சேரி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


