News October 30, 2025

புதுவை: கத்தியை காட்டி மிரட்டல்-வாலிபர் கைது!

image

புதுவை மேட்டுப்பாளையம் உதவி ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, முத்திரையர்பாளையம் காந்தி வீதியில் ஒருவர் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், ரகளையில் ஈடுபட்ட முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த முருகன் (30) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் வைத்திருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

Similar News

News October 30, 2025

காரைக்காலில் அரசு சார்பில் கலை நிகழ்ச்சி ஏற்பாடு

image

புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறையின் சார்பாக 01-11-2025 அன்று மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையார் கலையரங்கத்தில், கிராமிய கலை நிகழ்ச்சியும், பரத நாட்டிய நிகழ்ச்சியும், இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதில் புதுச்சேரி அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுக்களித்து சிறப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News October 30, 2025

புதுவை: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

image

புதுவை மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் <>சஞ்சார்சாத்தி இணையம்<<>> மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இங்கே க்ளிக் செய்து இப்போதே செக் பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 30, 2025

புதுவையில் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் பண மோசடி

image

புதுவையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் மொத்தமாக ரூ.12.54 லட்சம் பணத்தை ஆன்லைனில் செலுத்தி ஏமாற்றப்படுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதன்படி பாகூரில் ஒருவர் ரூ.11 லட்சத்து 91 ஆயிரத்து 300-ம், தட்டாஞ்சாவடியில் ஒருவர் ரூ.49 ஆயிரமும், வெங்கட்டா நகரில் ஒருவர் ரூ.10 ஆயிரமும், கதிர்காமத்தில் ஒருவர் ரூ.3600-ம் என ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறனர்.

error: Content is protected !!