News April 15, 2025
புதுவை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் அலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த வகையில் நேற்று துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதுபோல் நடப்பதால் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News April 16, 2025
புதுவை: மே.30 கடைசி நாள்

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றி தழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.
News April 16, 2025
புதுச்சேரி: பிரிந்த தம்பதிகளை சேர்த்துவைக்கும் ஆலயம்

புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவர் வரதராஜரை வழிபட இல்லறவாழ்வில் பிரிந்து வாழும் தம்பதிகள், மீண்டும் வாழ்வில் சேர்ந்து வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. மேலும், திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டுவோர் மற்றும் சொத்து தகராறு உள்ளவர்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க…
News April 16, 2025
புதுவை: ஆப் மூலம் ரூ.5.06 லட்சம் மோசடி

புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன். இவரிடம் மர்ம நபர் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரிபோல் பேசி வங்கி கணக்கிற்கு கே.ஒய்.சி. விவரங்களை புதுப்பிக்குமாறு கூறி ஏ.பி.கே. செயலியை அனுப்பி உள்ளார். இதையடுத்து சீனிவாசனும் ஏ.பி.கே. செயலியை பதி விறக்கம் செய்த சிறிது நேரத்திலேயே அவரது கணக்கிலிருந்து ரூ.5.06 லட்சம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார்.